கொழும்பு துறைமுகத்தின் ஊழியர்கள் 3 பேர் உட்பட 19 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் இருந்து ஐ.ஓ.சி நிறுவனத்திற்காக திருகோணமலை துறைமுகத்திற்கு எரிபொருளை கொண்டு வந்த கப்பலின் பணிக்குழாமின் 17 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது.
இதையடுத்து, அவர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த கப்பல் முன்னதாக கொழும்பு துறைமுகத்தை வந்ததன் பின்னரே, அங்கிருந்து திருகோணமலை துறைமுகத்திற்கு சென்றுள்ளது.
இந்த நிலையில், கொழும்பு துறைமுகத்தின் ஊழியர்கள் 3 பேர் உட்பட 19 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.