டுபாயிலிருந்து நாடுதிரும்பிய இருவருக்கு கொவிட்-19 தொற்று

டுபாயிலிருந்து அண்மையில்  நாடுதிரும்பிய இருவருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதியனது.

அவர்களுள் 19 பேர் கடற்படையினர்.

ஏனைய இரண்டு பேரும், டுபாயிலிருந்து அண்மையில் நாடு திரும்பிய நிலையில், கிராகம தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமான விசேட வைத்தியர் அனில் ஜாசாங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நேற்றுவரை 1,089 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்களுள் 640 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.

420 பேர் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.

9 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435