மத்திய கிழக்கு நாடுகளின் இணக்கப்பாட்டுக்காய் காத்திருக்கும் இலங்கை

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் அனைத்து இலங்கையர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனை செய்வதற்கு அந்நாடுகள் இணக்கம் தெரிவித்தவுடன் புலம்பெயர் தொழிலாளர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கையை அரசாங்கம் இந்த வாரம் ஆரம்பிக்கும் என்று ஜனாதியின் மேலதிக செயலாளர் (வௌிநாட்டு உறவுகள்) ஓய்வுபெற்ற அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

த மோர்னிங் இணையளத்திற்கு வழங்கிய செவ்வியொன்றில் அவர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் உள்ள நாடுகள் பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்வது தொடர்பான இணக்கபாட்டை வழங்கும் வரை அரசாங்கம் காத்திருக்கிறது. ஐக்கிய அரபு இராச்சியம் (டுபாய். அபுதாபி) தாயகம் திரும்ப விரும்பும் அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்ள வாய்மூல இணக்கப்பாட்டை வழங்கியுள்ளது.

இணக்கப்பாடு தாமதிக்கப்படுமாயின் நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை இவ்வாரம் ஆரம்பிக்கப்படும். இந்த வாரத்திற்குள் மத்திய கிழக்கு நாடுகள் சம்மதம் தெரிவிக்கும் என எதிர்பார்க்கிறோம்.

குவைத் மற்றும் துபாயில் இருந்து திரும்பி வருபவர்களிடையே அதிக எண்ணிக்கையிலான கோவிட் -19-நேர்மறை வழக்குகள் பதிவாகியுள்ளதால், கொரோனா வைரஸ் தொற்றுநோயின் விளைவாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை திருப்பி அனுப்புவதை அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

“குவைத்திலிருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் அனைத்து வரப்பட்ட பின்னர் கட்டாரில் இருந்து அழைத்து வரப்பட்டனர். அவர்களில் 80 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து இங்கிலாந்தில் இருந்து ஒரு தொகுதியினர் அழைத்து வரப்பட்டனர். அவர்களில் 2 பேர் மட்டுமே தொற்றுக்குள்ளாகியிருந்தனர்.

இதுவரை, 20 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 6,000 இலங்கையர்களை நாடு திருப்பி அனுப்பியுள்ளது.

“இதுபோன்ற அதிக எண்ணிக்கையிலானவர்கள் திருப்பி அனுப்பப்படும்போது, ​​ எங்களிடம் போதுமான தனிமைப்படுத்தல் நிலையங்கள், தொடர்ச்சியாக பி.சி.ஆர் சோதனைகளை நடத்தும் திறன் போன்றவை குறித்து நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435