ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவை தற்காலிக இடைநிறுத்தம் நீடிப்பு

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவை தற்காலிக இடைநிறுத்தம் இம்மாதம் 31ம் திகதி வரை நீடிக்கபபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் 19 தொற்று காரணமாக உலக நாடுகளில் நாடுகளுக்கு இடையிலான விமான போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸும் தனது சேவை இடைநிறுத்தத்தை இம்மாதம் 31ம் திகதி வரை நீடிக்க தீர்மானித்துள்ளதாக நிறுவனம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறு இருப்பினும் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு நல்கும் வகையில் மருந்து, மருத்துவ உபகரணங்கள், அத்தியவசிய சேவை பொருட்கள் உட்பட சேவைகளுக்காக தமது நிறுவனம் இயங்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு 0117771979 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435