முற்கொடுப்பனவு வழங்குமாறு பெல்மோரல் தோட்டத் தொழிலாளர் போராட்டம்

தீபாவளி பண்டிகைக்கான முற்கொடுப்பனவு இதுவரையில் தமக்கு வழங்கப்படவில்லை என்று கூறி அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்டத் தொழிலாளிகள் இன்று (22) எதிர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

தமது தோட்டத்தில் சுமார் 240 தொழிலாளர்கள் பணியாற்றும் நிலையில் அவர்களுக்கான பண்டிகை முற்கொடுப்பனவு இதுவரை வழங்கப்படவில்லையெனக்கூறியே அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

தீபாவளிக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தமக்கான முற்கொடுப்பனவை உடனடியாக தருமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறத்தியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435