அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்

நாட்டில் நேற்று (31) 37 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய 2 பேருக்கும், கட்டாரில் இருந்து நாடு திரும்பி நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட 32 பேருக்கும், இலங்கை வந்துள்ள இந்திய கடலோடிகள் 3 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி நாட்டில் நேற்று வரையில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 49 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றில் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 8 பேர் நேற்று குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதன்படி, நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 868 ஆக அதிகரித்துள்ளது.

கொவிட் 19 தொற்றால் பீடிக்கப்பட்டுள்ள 169 பேர் தொடர்ந்தும் நாட்டில் உள்ள பல வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435