அத்துமீறி நுழைந்த மருத்துவர்களை உடனடியாக வெளியேற உத்தரவு

தமது பிள்ளைகளுக்கு பிரபல பாடசாலைகளில் இடம் கிடைப்பதில் சிரமம் நிலவுவதாக கூறி கல்வியமைச்சை முற்றுகையிட்ட அனைத்து வைத்தியர்களும் உடனடியாக அவ்விடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கடுவல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று மாலை (14) இவ்வாறு கல்வியமைச்சினுல் பலவந்தமாக நுழைந்த வைத்தியர்கள் தொடர்ந்தும் அமைச்சின் கேட்போர்கூடத்தில் இருக்கின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் தலைவர் டொக்டர் அனுருத்த பாதெனிய, செயலாளர் டொக்டர் நவீன் டி சொய்சா உட்பட சங்க வைத்திய அதிகாரிகள் சிலரே இவ்வாறு கல்வியமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.

இதனையடுத்து இவ்விடயம் தொடர்பில் கல்வியமைச்சு நீதிமன்றில் முறைப்பாடு செய்ததது. இதனை கருத்திற்கொண்ட நீதவான் நீதிமன்றம் கல்வியமைச்சில் தங்கியிருக்கும் மருத்துவர்களை உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435