அனுமதியின்றி ஒருநாள் சம்பளம் அறவிட முடியாது- ஜோசப் ஸ்டாலின்

அதிபர், ஆசிரியர்களின் சம்மதமின்றி ஒருநாள் வேதனத்தை – திணைக்களங்கள் அறவிடமுடியாது  என  இலங்கை ஆசிரியர் சங்கம்  தெரிவித்துள்ளது.
கொவிட் -19 நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக – அதிபர், ஆசிரியர்களின் ஒருநாள் வேதனத்தை கழிக்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளமை தொடர்பிலேயே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாகவது,
தற்போது நிலவும் – இக்கட்டான சூழ்நிலையில் – அதிபர், ஆசிரியர்கள் பலர் தாமாக முன்வந்து – தமது நிதிப்பங்களிப்புகள் மூலமாக – பல நலத்திட்டங்களை இலங்கை ஆசிரியர் சங்கத்தினூடாகவும், சமூக அமைப்புகள் ஊடாகவும், தனித்தனியாகவும் முன்னெடுத்து வருகிறார்கள்.
ஊரடங்கு தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்ட நிலையில் – அன்றாடம் உழைத்து வாழ்ந்தவர்கள் – பட்டினியை எதிர்நோக்கும் ஆபத்தான சூழலில் இருந்தபோது – அரசு பாராமுகமாக இருந்தது. இன்றும்கூட -அரசால் அறிவிக்கப்பட்ட சலுகைகளும், உதவிகளும் பாதிக்கப்பட்டவர்களை சரியாக சென்றடையவில்லை என்னும் குற்றச்சாட்டு நீங்கவில்லை.
இந்த சூழலில் – அதிபர், ஆசிரியர்களின் கணிசமான நிதிப்பங்களிப்புகளைப்பெற்று – இலங்கை ஆசிரியர் சங்கமும் மனிதாபிமான உதவிகளை கணிசமான அளவில் செய்துவருகிறது. அதுமட்டுமல்லாமல் – தனிப்பட்டமுறையில் பாடசாலைகளின் அதிபர் மற்றும் ஆசிரியர்களும் கூட – தமது பாடசாலை மாணவர்களுக்கான மனிதாபிமான உதவிகளுக்காக நிதிப்பங்களிப்பைச் செய்துவருகிறார்கள்.
இதுவரை அவ்வாறு செய்யாதவர்களைக் கூட – பாடசாலை மட்டங்களில் செயற்படுத்துமாறு – எமது சங்க உறுப்பினர்களூடாக அறிவுறுத்தியுள்ளோம். அதற்குரிய செயற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. இலங்கை ஆசிரியர் சங்கம் களத்தில் நேரடியாக மேற்கொண்டுவரும் – மனிதாபிமான உதவிகளுக்கும் அதிபர், ஆசிரியர்கள் தாமாக முன்வந்து – அனுசரணை வழங்கிவருகிறார்கள். இந்நிலையில் – அதிபர், ஆசிரியர்களின் சம்மதமின்றி – அவர்களின் ஒருநாள் சம்பளத்தை – வடமாகாண கல்வித்திணைக்களம் அறவிடமுடியாது என இலங்கை ஆசிரியர்சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப்ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435