அமைச்சரவை பத்திரத்தையும் மீறி தொடர்ச்சியான போராட்டம்

புகையிரத சேவை அத்தியவசிய சேவையாக பிரகடனப்படுத்தி அமைச்சரவை பத்திரம் அனுமதிக்கப்பட்டாலும் தொடர்ச்சியாக போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் குறித்த அமைச்சரவை பத்திரம் தொடர்பில் இன்று (01) மாலை கலந்துரையாடவுள்ளதாக அச்சங்கங்கள் அறிவித்துள்ளன.

அக்கலந்துரையாடலில் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கவுள்ளதாகவும் அச்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த 24ம் திகதி நள்ளிரவு ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தமையினால் பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435