அமைச்சர் தலையிட்டு தீர்வு வழங்கவேண்டும்

தமது வேதன பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி தேசிய நீர்வளங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்கள் இன்று (02) மீண்டும் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நான்கு மணித்தியாலங்களுக்கு இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட உள்ளதாக நீர்வளங்கள் தொழிற்சங்கத்தின் ஒன்றிணைந்த கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரான பொறியியலாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாடுமுழுவதுமுள்ள தமது அனைத்து பணியிடங்களிலும் இந்தப் பணிப்புறக்கணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக இடம்பெற்ற இரண்டு பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் நிறைவடைந்தது.

இந்த நிலையில், விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர் சிறந்த தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கும்வரை தமது தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435