அரசாங்கத்தை எச்சரிக்கும் குடிவரவு திணைக்கள அதிகாரிகள் சங்கம்

குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

தமக்குள்ள தொழில் பிரச்சினைகளை தீர்க்குமாறும் 48 மணி நேரத்திற்குள் தமது பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படாவிடின் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகள் அறிவித்துள்ளது.

குறித்த 48 மணி நேரத்தில் தமது பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிடின் விமானநிலையங்கள், துறைமுகங்கள் உட்பட பலவிடங்களில் பணியாற்றும் ஊழியர்கள் இணைந்து பாரிய போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக இச்சங்கத்தின் தலைவர் கே.எ.எ.எஸ் கணுகல எச்சரித்துள்ளார்.

மிக நீண்டகாலமாக குடிவரவு குடியகழ்வு சேவையிலுள்ளவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் தமது சேவையில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டியுள்ளபோதிலும் அதற்கான தீர்வு இது வரையில் எட்டப்படவில்லை என்றும் கணுகல தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435