அரசியல் பழிவாங்கலுக்குள்ளாவர்களுக்கு நிவாரணம் கிடைப்பதில் தாமதம்

அரசியல் பழிவாங்கல்களுக்குள்ளானவர்களுக்கான நிவாரணங்களை வழங்குவதாக நூறு நாள் அரசாங்கத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்த போதிலும் நடவடிக்கை மந்த கதியில் செல்கின்றமையினால் சுமார் 18,000 இற்கும் அதிகமான அரச அதிகாரிகள் பாரிய சிக்கல்களுக்கு முகம்கொடுத்துள்ளனர்.

இவ்வாறு அரசியல் பழிவாங்கல்களுக்குள்ளானவர்களுக்கு நீதி வழங்குவதற்காக நூறு நாள் அரசாங்கத்தினால் பிரதமரில் ஆலோசனைக்கமைய குழுவொன்று அமைக்கப்பட்டது. அரசியல் பழிவாங்கல்களுக்கு முகம் கொடுத்த முப்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இக்குழுவிற்கு விண்ணப்பித்திருந்தனர்.எனினும் அவர்களில் 12,000 பேருக்கு எவ்வித அநீதியும் இழைக்கப்படவில்லை என்று அக்குழு தீர்மானித்தது. அதற்கமைய ஏனைய பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டாரவினால் அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட்டு அதற்கான அனுமதியும் பெறப்பட்டது.

வழங்கப்படவேண்டிய நிவாரணங்கள் தொடர்பில் அமைச்சின் செயலாளர்கள் தெளிவுபடுத்தப்பட்ட போதிலும் அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க அமைச்சின் செயலாளர்கள் தவறியுள்ளனர். மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை இரண்டு மாதங்களுக்குள் தெரிவிக்குமாறு கூறியிருந்த போதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வேலைத்தளம்/ நன்றி- திவயின

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435