அரச துறையில் 4,700 பேருக்கு பதவி உயர்வு தடைப்பட்டுள்ளது

கல்வி அமைச்சின் முறையற்ற செயற்பாடுகளின் காரணமாக சுமார் 4,700 அதிபர்களுக்;கான பதவி உயர்வு சில வருடங்களாக தடைப்பட்டுள்ளது.

2010ஆம், 2012ஆம் ஆண்டுகளில் நியமனம் பெற்ற இந்த அதிபர்களுக்கு பதவி உயர்வுகளை வழங்குவதற்கான அமைச்சின் வர்த்தமானி அறிவித்தல் கடந்த 2016ஆம் ஆண்;டு ஜுன் மாதமே வெளியிடப்பட்டுள்ளது.

இடைக்கால ஏற்பாடுகளுக்கு அமைய, பதவி உயர்வுகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதவி உயர்வு கிடைக்காமையின் காரணமாக, தேசிய பாடசாலையின் அதிபர் பதவிக்காக விண்ணப்பதற்கான சந்தர்ப்பம் அவர்களுக்கு இல்லாது போயுள்ளது.

2010ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட 710 அதிபர்களும், 2012இல் நியமனம் பெற்ற 4000 அதிபர்களும் இதில் அடங்குகின்றனர்.

இந்த அநீதி குறித்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளபோதும், தற்போதுவரை எவ்வித பதிலும் கி;டைக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வழிமூலம்: திவயின

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435