அடையாளப்பணிப்புறக்கணிப்பில் அரச நிறைவேற்று அதிகாரிகள் குழு

அரச நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றிணைந்த குழு இன்றைய தினம் (27) ஒரு நாள் அடையாளப்பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளது.

தேசிய வேதன கொள்கைளை மீறி சட்ட அதிகாரிகளுக்கு மாத்திரம் வேதன மற்றும் கொடுப்பனவு அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த குழுவின் செயலாளர் எச்.எல்.ஏ உதயசிறி தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக ஏனைய அரச நிறைவேற்றுநர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஒருநாள் அடையாள சேவைப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படுவதாக அரச நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றிணைந்த குழுவின் செயலாளர் எச்.எல்.ஏ உதயசிறி தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்தை தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச நிறைவேற்று அதிகாரிகளின் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களது அன்றாட செயற்பாடுகளுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக அரச நிறைவேற்று அதிகாரிகளின் சங்கத்தின் தலைவர் நிமல் கருணாசிறி தெரிவித்துள்ளார்.

சட்டத்துறை அதிகாரிகளுக்கு மாத்திரம் வேதனம் மற்றும் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராகவே இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

இலங்கை நிர்வாக சேவை சங்கம், தேசிய இறைவரி தொழிற்சங்க ஒன்றியம், அகில இலங்கை ஆசிரியர் கல்வி சேவை சங்கம் உள்ளிட்ட 15 நிறைவேற்று அதிகாரிகளின் சங்கங்கள் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435