அவுஸ்திரேலியாவில் இருந்து 229 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

அவுஸ்திரேலியாவில் இருந்து 229 இலங்கையர்கள் நேற்று (11) இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

மெல்போர்ன் நகரில் இருந்து ஶ்ரீலங்கன் எயார்லைன் நிறுவனத்திற்கு சொந்தமான யு.எல் – 600 இலக்க விசேட விமானத்தில் இவ்விலங்கையர்கள் அழைத்து வரப்பட்டனர்.

தொழில் மற்றும் உயர் கல்வி நிமித்தம் அவுஸ்திரேலியா சென்றிருந்த குறித்த இலங்கையர்கள் கொவிட் 19 தொற்று காரணமாக தாய்நாட்டுக்கு திரும்பி வர விருப்பம் தெரிவித்திருந்திருந்தவர்களாவர்.

பிற்பகல் 2.33 மணியளவில் அவர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தனர் குறித்த இலங்கையர்களுக்கான PCR பரிசோதனை விமானநிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள விசேட ஆய்வுகூடத்தில் நடத்தப்பட்டது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435