அனைத்து பட்டதாரிகளுககும் நான்கு கட்டங்களாக வேலைவாய்ப்பு – அரசாங்கம்

hபல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்று, வேலைவாய்ப்பு பெறாமல் உள்ள அனைத்து பட்டதாரிகளுக்கும், நான்கு கட்டங்களாக அரசாங்க வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று தேசி அமைச்சர் கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

‘2016 டிசெம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் பட்டம்பெற்ற பட்டதாரிகளுக்கு இரண்டு கட்டங்களாக, இந்த ஆண்டு இறுதிக்குள் வேலை வாய்ப்பு அளிக்கப்படும்.

2018 ஜூன் 30ஆம் திகதிக்கு முன்னர் பட்டங்களைப் பெற்ற ஏனைய பட்டதாரிகளுக்கு இரண்டு கட்டங்களாக, அடுத்த ஆண்டில் வேலை வாய்ப்பு வழங்கப்படும்.

இந்த வேலை வாய்ப்பில் வெளிவாரி பட்டதாரிகள் புறக்கணிக்கப்படமாட்டார்கள். ஆனால், உள்வாரி பட்டதாரிகளுக்கு முன்னுரிமை கொடுக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

பட்டதாரிகள் அரச வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிப்பதற்கான வயதெல்லையை அதிகரிக்க வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, பட்டதாரிகள் அரச வேலைவாய்ப்புக்காக விண்ணப்பிக்கும் வயதெல்லை 35 இல் இருந்து 45 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435