ஆசிரியர் பயிற்சிக்கான விண்ணப்பங் கோரல்

எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஆசிரியர் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சி நெறியை தொடர விரும்பும் ஆசிரியர்கள்/ ஆசிரிய உதவியார்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

குறித்த பயிற்சியை தொடர விரும்பும் குறித்த ஆலோசனைகளை கருத்திற்கொண்டு, மாதிரி விண்ணப்பப்படிவத்திற்கமைய தயாரிக்கப்பட்ட விண்ணப்பப்படிவங்களை பூர்த்தி செய்து நிறுவனப் பொறுப்பாளரினூடாக கல்விப் பணிப்பாளர், ஆசிரியர் கல்வி நிருவாகக் கிளை, கல்வியமைச்சு, இசுருபாய, பத்தரமுல்ல என்ற முகவரிக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

கடித உரையின் இடது பக்க மூலையில் 2017/ 2018, கல்வியாண்டுக்காக ஆசிரியர் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சி நெறியினைத் தொடருதல் என்று குறிப்பிட்டு பதிவுத் தபாலினூடாக விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

தாமதமாக கிடைக்கும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435