ஆசிரியர் மற்றும் அதிபர் சேவையில் 287 பேருக்கு தரமுயர்வு

ஆசிரியர் மற்றும் அதிபர் சேவையில் 287 பேருக்கு கல்வி அமைச்சரால் தரமுயர்வு வழங்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தலைமையில் கல்வி அமைச்சில் இதற்கான நிகழ்வு நேற்று (23) இடம்பெற்றது.

ஆசிரியர் சேவையில் 3ஆம் தரத்துக்கு உள்வாங்குவதற்காக இடம்பெற்ற திறந்த பரீட்சையில் சித்திபெற்ற 24 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டது.

அத்துடன், இலங்கை அதிபர் சேவை 2ஆம் தரத்தில் தகைமைகளை பூர்த்தி செய்த 263 அதிகாரிகளுக்கு இலங்கை அதிபர் சேவை 1ஆம் தரத்துக்கு தரமுயர்வுகான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435