ஆசிரிய உதவியாளர்களை இணைப்பதற்கான நேர்முகத்தேர்வு

பெருந்தோட்டப்புற பிரதேசங்களை அண்மித்த தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கு ஆசிரிய உதவியாளர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகத்தேர்வு இன்று (03) ஆம்பமாகிறது.

இன்று தொடக்கம் எதிர்வரும் 8ம் திகதி வரை இசுறுபாய கல்வித் திணைக்களத்தின் கேட்போர்கூடத்தில் இந்நேர்முகத்தேர்வுகள் நடைபெறவுள்ளன.

நேர்முகத்தேர்வுக்காக விண்ணப்பித்தவர்களுக்கான கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கல்வித் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு தொடக்கம் ஆசிரிய உதவியாளர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை கட்டம் கட்டமாக நடைபெற்று வருகிறது. அதற்கமைய இன்று ஆறாவது கட்டமாக ஆசிரிய உதவியாளர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகத்தேர்வு ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435