ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்புபட்ட 5000 பேரிடம் பி.சி.ஆர் பரிசோதனை

மினுவாங்கொட ப்ரெண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்புடைய சுமார் 5,000 பேரிடம் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் பிரதான மருத்துவ அதிகாரி சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை கொத்தணியில் கொவிட்-19 தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 1053 ஆக அதிகரித்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலை கொத்தணியில் கொவிட்-19 தொற்று உறுதியானவர்களுடன் நெருங்கிய தொடர்பிணை பேணிய 18 பேருக்கு நேற்று தொற்றுறுதியானது.

அத்துடன், மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலையின் பணியாளர் ஒருவருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலிருந்து நாடு திரும்பிய 7 பேருக்கும், ஈரானிலிருந்து நாடு திரும்பிய இரண்டு பேருக்கும், குவைட்டிலிருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் கொவிட்-19 தொற்று உறுதியானதாக அரசாங்க தகவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் நேற்றைய தினம் மேலும் 29 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது.

இதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 4488 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து மேலும் 4 பேர் குணமடைந்துள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 278 ஆக அதிகரித்துள்ளது.

ஆயிரத்து 197 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435