இத்தாலி பயணிகள் கப்பலில் பணியாற்றி இலங்கையர் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டார்!

இத்தாலியின் எம்.எஸ். சீ மெக்னிபிக்கா பயணிகள் கப்பலில் இருந்த பணியாளர்களில் ஒருவரான இலங்கையர் அநுர பண்டார ஹேரத் என்பவர் கடற்படையினர் பொறுப்பெடுத்துள்ளனர் என்று இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் இசுரு சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார் என்றும் அவரை அழைத்து வருவதற்கான குழுவொன்று அதிகாலை புறபட்டது என்றும் அவர் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அழைத்து வரப்பட்டவர் முழுமையாக தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கபட்டது.

இத்தாலிய பயணிகள் கப்பலான எம்.எஸ்.சீ மெக்னிபிக்காவில் குறித்து கவனம் செலுத்தப்பட்டதையடுத்து ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய, கடற்படை தளபதியின் பூரண பங்களிப்பில் குறித்து அழைத்து வரப்பட்டார். கொவிட் 19 கட்டுப்படுத்தும் ஜனாதிபதி படையணியின் ஆலோசனைக்கமைய கடற்படை பணியாற்றியது என்றும் குறித்த நபர் பாதுகாப்பாக பூஸா தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் கடற்படை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

மூலம்- அரசாங்க தகவல் திணைக்களம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435