இலங்கையில் அதிகரிக்கும் எச்ஐவி தொற்று

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு முதல் ஆறு மாதங்களில் எச்ஐவி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதாக தேசிய பாலியல் நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

தேசிய பாலியல் நோய் கட்டுப்பாட்டு பிரிவு வழங்கிய தகவலுக்கமைய கடந்த ஆண்டு முதல் ஆறு மாதக்காலப்பகுதியில் எச்.ஐவி தொற்றுக்குள்ளான 116 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு முதல் ஆறுமாதக் காலப்பகுதியில் அவ்வெண்ணிக்கை 127 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இவ்வாண்டு இதுவரை எச்ஐவி தொற்றுள்ளதா என்று கண்டறியும் பரிசோதனையை சுமார் 6 இலட்சம் பேர் மேற்கொண்டுள்ளனர். கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் எச்ஐவி தொற்றுக்குள்ளான பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஓரினச் சேர்க்கையே இவ்வாறு ஆண்கள் மத்தியில் எச்ஐவி தொற்று அதிகரிப்பதற்கு ஒரு காரணமாகும் என்று தேசிய பாலியல் நோய் கட்டுப்பாட்டு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சிசிர லியனகே தெரிவித்தார்.

பாதுகாப்பற்று பாலியல் தொடர்பின் காரணமாகவே எச்ஐவி தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது என்று வைத்தியர் லியனகே மேலும் சுட்டிக்காட்டினார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435