இலங்கையில் 10வது கொரோனா மரணம்: குவைத்திலிருந்து நாடுதிரும்பியவர்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 10ஆவது உயிரிழப்பு இன்று பதிவாகியுள்ளது.

குவைத்திலிருந்து நாடுதிரும்பிய திருகோணமலை மங்கி ப்ரிட்ஜ் இராணுவ தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 51 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

நேற்றிரவு உயிரிழந்த அவர், பயாகலை பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

கடந்த 20 ஆம் திகதி 466 பேர் கொண்ட குழுவினருடன் அவர் குவைத்திலிருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435