இலங்கையில் கொவிட்-19 ஆல் மரணித்தோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.

கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த 84 வயதான பெண் ஒருவர் தனியார் வைத்தியசாலையிலிருந்து மாற்றப்பட்டு IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இந்த வைத்தியசாலையில் அவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று (09) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் உயிரிழப்பதற்கு காரணமாக கொவிட் 19 நிமோனியா நிலைமையே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மரணம் இலங்கையில் பதிவான 36 ஆவது கொவிட் 19 தொற்று நோயாளரின் மரணமாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435