இலங்கை சுதந்திர சேவையாளர் சங்க தலைவர் கைது

இலங்கை சுதந்திர சேவையாளர் சங்கத்தின் கட்டுநாயக்க விமான நிலைய கிளையின் தலைவர் உட்பட மூவர் வரக்காபொல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அரச வாகனங்­களை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் இவர்களை நேற்று கைது செய்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தேசிய நாளிதழான கேசரிக்கு தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்துக்கு சொந்தமான இரு வாகனங்களை வரக்காபொல பகுதிக்கு எடுத்து வந்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பேரணியில் பயன்படுத்தியமை தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

வேலைத்தளம்/ நன்றி- வீரகேசரி

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435