இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் 23ஆவது பேராளர் மாநாடு

இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் 23ஆவது பேராளர் மாநாடு கடந்த 22 ஆம் திகதி பத்தரமுல்லையில் உள்ள அபே கம கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்த மாநாட்டின் போது இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் தலைவராக சத்துர சமரசிங்க தெரிவுசெய்யப்பட்டார்.

உப தலைவர்களாக இரண்டு பேர் தெரிவு செய்யப்பட்டனர்.

ஹட்டன் கிளையின் நிர்வாக சபை உறுப்பினர் மாரிமுத்து சுதாகரன் மற்றும் திம்புள்ளபத்தனை தலவாக்கலை கிளையின் முன்னாள் தலைவர் இளையராஜா ஆகியோர் உப தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

பொருளாளராக சீதாவாக்கை கிளையின் முன்னாள் தலைவர் நிசாந்த வன்னியாராச்சி தெரிவுசெய்யப்பட்டார்.

பிரதித் தலைவராக காலி கிளையின் நிர்வாக சபை உறுப்பினர் ரொபட் பிரான்சிஸ் தெரிவுசெய்யப்பட்டார்.

2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த சேவையாளர் விருது இந்த பேராளர் மாநாட்டில் வழங்கப்பட்டது.

சிறந்த செயற்பாட்டாளருக்கான விருது இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சவுந்தராஜன் சந்திரமதனுக்கு வழங்கப்பட்டது.

எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் நூற்றாண்டு விழா தொடர்பில் இந்த பேராளர் மாநாட்டில் கலந்துரையாடப்பட்டுள்ளது

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435