உதவி சுங்க அதிகாரிகளாக 68 பேர் நியமனம்

உதவி சுங்க அதிகாரிகளாக தெரிவு செய்யப்பட்ட 68 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் (24) நிதியமைச்சில் நடைபெற்றது.

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, நியமனக் கடிதங்ளை தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு வழங்கினார்.

திறந்த போட்டிப் பரீட்சையினூடாக தோற்றிய 10,000 பேரில் அதிகூடிய புள்ளி அடிப்படையில் 227 பேர் சித்தியடைந்திருந்தனர். அவர்களுள் நேர்முகத் தேர்வு மூலம் உதவி சுங்க அதிகாரிகளாக தெரிவுசெய்யப்பட்ட வர்களுக்கே இந்நியமனங்கள் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் சுங்கத்திணைக்கள பணிப்பாளர் நாயகம் பி.எம்.எஸ்.சார்ள்ஸும் கலந்துகொண்டார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435