ஏமாற்றுவதன் விளைவை ஒக்டோபரில் காணலாம்

பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் விரைவில் கோரப்படும் என்று கிழக்கு முதலமைச்சர் தெரிவித்து ஒரு மாத காலம் நிறைவடைந்துள்ள நிலையில இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கிழக்கு பட்டதாரிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

நூறு நாட்களையும் தாண்டி போராடி வரும் பட்டதாரிகளை போலி வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்ற நினைத்தால் அதன் விளைவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இடம்பெறவுள்ள தேர்தலில் காணலாம் என்றும் பட்டதாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நிரந்தர நியமனம் கோரி கிழக்கு பட்டதாரிகள் சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்து 122 நாட்கள் கடந்த நிலையில் கருத்து தெரிவிக்கையிலேயே பட்டதாரிகள் இவ்வாறு கூறியுள்ளனர்.

மேலும் விரைவில் 1700 பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் உள்ளீர்ப்பதற்கான விண்ணப்பங்கள் விரைவில் கோரப்படவுள்ளதாகவும் அதற்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என்றும் கிழக்கு முதலமைச்சர் உறுதியளித்திருந்தார். அத்துடன் போராட்டத்தையும் கைவிடுமாறு கோரியிருந்தார். எனினும் அவ்வாறு விலகியிருந்தால் அது அவருக்கு வாய்ப்பாக போய்விடும் என்பதற்கான விண்ணப்பம் கோரப்படும் வரையில் காத்திருந்தோம். வாக்குறுதி வழங்கி ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் அவ்வாறான வர்த்தமானி அறிவித்தல் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

இவ்வாறு இழுத்தடிப்புச் செய்து காலத்தை கடத்த எண்ணினால் அதன் விளைவை எதிர்வரும் ஒக்டோபரில் காணலாம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435