ஒக்டோபர் முதல் சம்பள முறைமை நடைமுறை: போராட்டம் கைவிடப்பட்டது

சம்பள பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு மற்றும் தெற்கு உள்ளிட்ட பல மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டுவந்த அரச பேருந்து ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடன் இன்று மாலை இடம்பெற்ற பேச்சு வார்த்தையினை அடுத்து போராட்டத்தை கைவிட தீர்மானித்ததாக பேருந்து தொழிற்சங்க ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

2006, 30ஆம் இலக்க முகாமைத்துவ சுற்றறிக்கைக்கு அமைய இலங்கை போக்குவரத்து சபையின் சம்பள முறைமை ஒக்டோபர் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைப்படுத்த இதன்போது இணக்கம் வெளியிடப்பட்டதாகவும் அந்த தொழிற்சங்கம் குறிப்பிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435