ஒன்றிணைவோம்! உங்கள் உதவி அவசியமான தருணம் இது!

வௌ்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவு என்பவற்றினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்து முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தேவையான உணவுப் பொருட்களை தந்துதவுமாறு இலங்கை விமானப்படை கோரியுள்ளது.

தற்போது முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு, உடை மற்றும் அவசியமான வேறு அத்தியவசிய பொருட்களை, சிற்றம்பலம், ஏ கார்டினல் மாவத்தையில் அமைந்துள்ள விமானப்படை தலைமையகத்திற்கு வழங்க முடியும். தற்போது நிவாரணப் பணிகளை ஆரம்பித்துள்ள விமானப்படை, அரணாயக்க, களனி, கொலன்னாவ உட்பட நாட்டின் ஏனைய பாகங்களில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறது.

மேலதிக தகவல்களை 011 313 3105 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு பெற்றுகொள்ளலாம்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435