ஒரே தினத்தில் 8000 பேர் கல்வியியற் கல்லூரிகளுக்கு

தேசிய கல்வியியற் கல்லூரிகளில் ஆசிரியர் போதனா பயிற்சிக்காக 8000 பேர் இம்மாதம் 25ம் திகதி இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

தெரிவு செய்யப்பட்ட அனைத்து விண்ணப்பதாரிகளுக்குமான அறிவித்தல்கள் இம்மாதம் 20ம் திகதிக்குள் தபால் மூலம் அனுப்பப்படவுள்ளன.

2016 மற்றும் 2017ம் ஆண்டுகளில் கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கமைய இரு குழுக்களாக 19 கல்வியியற் கல்லூரிகளுக்கு ஒரே தினத்தில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

அதற்கமைய 2016ம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய 2018/2020 கல்வியாண்டுக்காக ஒரு குழுவும், 2017ம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கமைய 2019/ 2021 கல்யாண்டுக்காக ஒரு குழுவும் இணைத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435