ஓய்வூதியம் பெறுபவர்களுக்காக 3 தினங்களுக்கு மருந்தகங்கள் திறப்பு

ஓய்வூதியம் பெறுபவர்களுக்காக, நாடளாவிய ரீதியில் உள்ள மருந்தகங்கள் மூன்று தினங்களுக்கு திறக்கப்படவுள்ளன.

நாளை (02)இ நாளை மறுதினம் (03) மற்றும் திங்கட்கிழமை (06) ஆகிய தினங்கள் திகதிகளில் திறக்க அரசாங்கத்தினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

குறித்த மூன்று தினங்களிலும் அரசாங்கத்தினால் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, இதற்காக இலங்கை இராணுவத்தினால் அவர்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதற்கமைய, ஓய்வூதியம் பெறும் சிரேஷ்ட பிரஜைகள் தமது மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு வசதியாக, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதற்கமை, ஓய்வூதியம் பெறுபவர்கள் தமது ஓய்வூதிய அட்டையை ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரமாகப் பயன்படுத்த அனுமதி வழங்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பதில் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக, ஜாலிய சேனாரத்ன மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, ஓய்வூதியம் பெறுவதற்காக ஓய்வு பெற்றோரை வங்கிகளுக்கு அழைத்து செல்லும் பணியை இராணுவம் மேற்கொண்டுவுள்ளதாக இராணுவ இணையதளம் செய்தி வௌியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435