கடலுக்கு சென்ற மீனவர் ஒருவரை காணவில்லை

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்பரப்பிலிருந்து லங்காபட்டணம் நேக்கி மீன்பிடிதொழிலுக்கு சென்ற மீன்பிடி படகு கவிழ்ந்ததில் ஒருவரை காணவில்லையென இன்று முறைப்பாடு செய்யப்பட்டதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று காலை லங்காபட்டணம் பிரதேசத்தில் மீன்பிடித்துக்கொண்டிருந்த படகொன்று கவிழ்ந்ததில் படகில் சென்ற நான்கு பேரில் ஒருவறைக்கானவில்லை எனவும், ஏனைய மூவரும் நீந்தி கரை சேர்ந்ததாக அறிய முடிந்துள்ளது.

இவ்வாறு கடலில் காணாமல் போனவர் கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாஞ்சோலை பிரதேசம் ஜாயா வீதியில் வசிக்கும் அப்துல் வஹாப் முகம்மது ஹனீப் (வயது-41) என சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர் .

காணாமல்போன நபரை பிரதேச வாசிகளின் ஒத்துழைப்புடன் தாங்கள் தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435