கல்வியமைச்சின் போலி நியமனங்கள் குறித்து உடனடி விசாரணை!

கல்வியமைச்சின் உயரதிகாரிகளின் போலியான கையெழுத்துடன் வடக்கு கிழக்கு மாகாண தேசிய பாடசாலைகளுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் உத்தரவிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள தேசிய பாடசாலைகளுக்கு சிற்றூழியர்கள் மற்றும் முகாமைத்துவ உதவியாளர்கள் நியமனங்களை கல்வியமைச்சில் கடமையாற்றும் மேலதிக செயலாளர்களின் போலி கையெழுத்துடன் நியமனக்கடிதங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

போலி நியமனக்கடிதங்களை பெற்றவர்கள் கடமைகளை பொறுப்பேற்க பாடசாலைகளுக்கு சென்ற நிலையிலேயே பாடசாலை அதிபர்களினால் தடுத்து நிறுத்தப்பட்டு உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டபோதே வழங்கப்பட்ட நியமனங்கள் போலியானவை என்று கண்டறியப்பட்டுள்ளன.

குறித்த நியமனக்கடிதங்களை வழங்குவதற்கு ஒருவரிடமிருந்து மூன்று முதல் ஐந்து இலட்சம் ரூபா வரை மோசடி நபர்களுக்கு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கல்வியமைச்சின் உத்தியோகப்பூர்வ இலச்சினைப்பதிக்கப்பட்டு சுமார் வடக்கு மாகாணத்தில் 64 நியமனங்களும் கிழக்கில் 30இற்கும் மேற்பட்ட நியமனங்களும் வழங்கப்பட்டுள்ளது.

கல்வியமைச்சில் மேலதிக செயலாளராக கடமையாற்றி பின்னர் அரசாங்க அதிபராக நியமனம் பெற்ற ஒருவரின் போலிக்கையெழுத்துடன் 2016ம் ஆண்டு வழங்கப்பட்ட நியமனங்கள் ஏற்கனவே இரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் மேற்படி போலி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

நன்றி – தினகரன் 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435