ஆசிரியர் நியமனம் எதிர்வரும் டிசம்பர்வரை இடைநிறுத்தம்

கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனத்தில் ஏற்பட்ட முரண்பாட்டு நிலைமையை அடுத்து, பதிலீடுகள் இல்லாமல் வழங்கப்பட்ட நியமனங்களை இடைநிறுத்த உள்ளதாக மாகாண மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, குறித்த ஆசிரியர் நியமனங்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி இடைநிறுத்;தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று (26) இடம்பெற்ற கண்காட்சி நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியி;ட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர், கிழக்கு மாகாணத்தில் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான நிர்வாக கட்டமைப்பில் மாற்றங்களை மேறகொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையை எதிர்நோக்க உள்ள மாணவர்களின் நலன்களைக் கருத்திற்கொண்டு கிழக்கு மாகாணத்தில் பதிலீடுகள் இன்றி மேறகொள்ளப்பட்ட நியமனங்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிவரை இடைநிறுத்துவதாக ஆளுநர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை (24) வெளியாகிய கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர் போட்டிப்பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் 28 ஆயிரத்து 268 பேர் சித்தியடைந்தும் ஆயிரத்து 440 பேருக்கே நியமனம் வழங்கப்படவுள்ளது.

இதனடிப்படையில் நடத்தப்பட்ட பொது அறிவு மற்றும் பொது உளச்சார்பு பரீட்சைகளில் இரு பாடங்களிலும் 40 புள்ளிகளுக்கு மேல் பெற்றும் அரைவாசிக்கு மேற்பட்டோருக்கு நியமனம் வழங்கப்படாத நிலையுள்ளதாக சித்தியடைந்த பட்டதாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

சித்தியடைந்த பட்டதாரிகள் அனைவருக்கும் நியமனங்களை வழங்குமாறு பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435