கிழக்கு ஆசிரியர் சம்பள நிலுவை, பதவியுயர்வு தொடர்பில் கவனம்

கிழக்கு மாகாண ஆசிரியர்களுடைய பதவி உயர்வு மற்றும் அவர்களுக்கான சம்பள நிலுவையை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மாகாண கல்விப்பணிப்பாளர் ஏ.ரி.எம்.நிசாம் மற்றும் மாகாண உதவிக்கல்விச்செயலாளர் ஆகியோருடன் இலங்கை ஆசிரியர் சங்கம் நடத்திய கலந்துரையாடலின் போது இவ்விடயம் தொடர்பில் வலியுறுத்தியுள்ளது.

இக்கலந்துரையாடலின் போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக சுட்டிக்காட்டிய ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கான பதவியுயர்வு மற்றும் சம்பள நிலுவை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கடந்த 2014ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23ம் திகதி வர்த்தமானியில் வௌியிடப்பட்டதாகவும் ஆனால் இதுவரையில் இவ்விடயங்கள் நடைமுறைப்படுத்தவில்லை என்றும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435