கிழக்கு பட்டதாரிகளுக்கு ஆசிரியர் தேர்வுக்கான நேர்முகத் தேர்வு

கிழக்கு பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் உள்ளீர்ப்பதற்கான நேர்முகத்தேர்வு எதிர்வரும் ஐந்தாம் திகதி திருகோணமலையில் நடைபெறவுள்ளது.

ஏற்கனவே போட்டிப்பரீட்சை நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் பெறப்பட்ட பெறுபேறுகளுக்கமைவாக தற்போது நேர்முகத் தேர்வு நடத்தப்படவுள்ளது.

திருகோணமலை உட்துறைமுக வீதியில் உள்ள கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு அலுவலகத்தில் மேற்படி போட்டிப்பரீட்சை நடத்தப்படவுள்ளது.

நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ள பட்டதாரிகள் அனைத்து ஆவணங்களினதும் மூலப்பிரதி மற்றும் நிழற்பிரதிகளை கொண்டு வருமாறும் அன்றே செயன்முறைத் தேர்வும் நடத்தப்படவுள்ளமையினால் குறிப்பிட்ட பாட நெறிக்கான 5 நிமிட செயன்முறைத் தேர்வுக்கு தயாராக வருமாறும் ஆணைக்குழவின் செயலாளர் டப்ளியு.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435