குடிவரவு திணைக்கள நிறைவேற்று அதிகாரி தரம் 11 போட்டிப்பரீட்சை

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அலுவலக இரண்டாவது சேவை நிறைவேற்று அதிகாரி பதவி தரம் II க்கு ஆட்களை சேர்த்துக்கொள்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறவுள்ளது.

3,780 பரீட்சார்த்திகளுக்கென கொழும்பில் 24 பரீட்சை மத்திய நிலையங்களில் இந்த பரீட்சை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சார்த்திகளுக்கான பரீட்சை அனுமதி அட்டை இம்மாதம் 11 ஆம் திகதி தபாலில் சேர்க்கப்பட்டுள்ளன. பரீட்சை அனுமதி அட்டை கிடைக்கப்பெறாதவர்கள் பரீட்சை அனுமதி அட்டை தொடர்பிலான விபரங்களை திணைக்களத்தின் வெளிநாட்டு பரீட்சைகள் கிளையுடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளமுடியும்.

தொலைபேசி இலக்கம் : 0112785230 / 0112177075 மற்றும் அவசர தொலைபேசி இலக்கம் 1911 மூலம் 24 மணித்தியாலங்களும் தொடர்பினை மேற்கொள்ளலாம்.

news.lk

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435