கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக பெருந்தோட்ட தொழிலார்களுக்கு வழங்கப்பட்ட சம்பள உயர்வு போதாது எனத் தெரிவித்து நானுஓய உடரதல்ல தோட்ட தொழிலாளர்கள் நேற்று (07) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்மையில் கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் 730 ரூபாய் சம்பள நிர்ணயம் செய்யப்பட்டது.

ஆனால், 590 ரூபாய் சம்பளத்தையே தோட்ட நிர்வாகங்கள் வழங்கி வருகின்றன எனத் தெரிவித்து அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

உடரதல்ல தோட்ட தொழிலாளர்கள், தோட்ட தொழிற்சாலைக்கு அருகில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தை உரிய முறையில் வழங்காததை கண்டிப்பதுடன், புதிய சம்பள ஒப்பந்தத்திற்கு தமது எதிர்ப்பை தெரிவிப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட நானுஓயா உடரதல்ல தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435