கொரோனாவினால் நேற்று நால்வர் மரணம்: மொத்த மரணங்கள் 73 ஆக உயர்வு

கொவிட் 19 தொற்றினால் நாட்டில் நேற்றைய (19) தினம் 4 மரணங்கள் பதிவாகின.

கொழும்பு -10 பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய ஆண் ஒருவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார். கொவிட் -19 தொற்றுறுதியுடன் ஏற்பட்ட நியூமோனியா நோயே மரணத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை பொக்குனுவிட்ட பகுதியை சேர்ந்த 59 வயதுடைய பெண் ஒருவர் தனது வீட்டிலேயே மரணித்தார். உயர் குருதி அழுத்தம் மற்றும் கொவிட் 19 – தொற்றுறுதியே இந்த மரணத்திற்கான காரணம் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான யுவதி ஒருவரும் கொவிட்-19 தொற்றால் மரணமானார். முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் வைத்தே அவர் உயிரிழந்துள்ளார். கொவிட்-19 தொற்றால் ஏற்பட்ட மூச்சிரைப்பே இந்த மரணத்திற்கு காரணம் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

களுத்துறை ஹல்தொட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 86 வயதான ஆண் ஒருவரும் கொவிட்-19 தொற்றால் மரணமானார். அவர் தனது வீட்டில் வைத்து உயிரிழந்துள்ளார். கொவிட்-19 தொற்றால் ஏற்பட்ட நெஞ்சு வலியே இந்த மரணத்திற்கு காரணம் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படிஇ கொவிட் – 19 தொற்றினால் நாட்டில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435