கொரோனா மரண எண்ணிக்கையில் திருத்தம் மேற்கொண்டது அரசாங்கம்

பாணந்துறை வைத்தியசாலையில் உயிரிழந்த 27 வயது நபரின் மரணத்தை 22ஆவது கொரோனா மரணமாக கருத முடியாது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

தொற்று நோய் விஞ்ஞான பிரிவு இதனை அறிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, கொவிட்-19 தொற்றினால் நாட்டில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக காணப்படுகின்றது.

நாட்டில் 22 ஆவது கொரோனா மரணம் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் பதிவாகியதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது.

பாணந்துறை பகுதியை சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்திருந்தது.

கடந்த 31 ஆம் திகதி பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் உயிரிழந்திருந்ததாகவும், பிரேத பரிசோதனையின்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டிருந்தது.

குறித்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டமையும் தெரியவந்துள்ளது.

தற்கொலை செய்துகொண்ட நபர் எவ்வாறு கொரோனா தொற்றினால் மரணித்தார் என்ற கேள்வி சமூகவலைதளங்களில் எழுப்பப்பட்டது.

இந்த நிலையில், அரசாங்க தகவல் திணைக்களத்தின் குறித்த அறிவித்தல் வெளியாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435