சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற 6 பேர் கைது

தஞ்சம் கோரி சட்ட விரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயன்று திரும்பியனுப்பப்பட்ட இலங்கையர்கள் 6 பேர் இன்று (23) நீர்கொழும்பு நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளனர்.

இன்று பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தை இன்று (23) வந்தடைந்த குறித்த ஆறு பேரையும் குற்றப்புலனாய்வு பொலிஸார் கைது செய்தனர்.

வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த 6 பேரும் கடந்த மாதம் 21ஆம் திகதி காத்தான்குடி கடற்பிரதேசத்தினூடாக சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா நோக்கி பயனமாகியுள்ளனர். அவர்கள் சென்ற படகில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக பல நாட்களாக படகு கடலிலேயே மிதந்த வண்ணமிருந்தது என்று தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர்கள் தொடர்பில் இலங்கை அரசினால் அவஸ்திரேலிய அரசிற்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து அந்நாட்டு காவல் படையினர் கண்காணித்து காப்பாற்றி அந்நபர்களை மீண்டும் இலங்கைக்கு திருப்பியனுப்பியமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435