சமூக வலைத்தள கட்டுப்பாட்டுக்கு புதிய சட்டம் அவசியம் – நீதி அமைச்சர்

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கும், மதங்களுக்கும் இடையில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையை தடுப்பதற்கு புதிய சட்டத்தை உருவாக்குவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை ஆணையாளர் அலுவலக அதிகாரிகள் குழுவினருடன் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எவ்வித பொறுப்புணர்வுமின்றி மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகளினால், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம், பெருமளவானோர் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

இதன் காரணமாக, இலங்கையில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்தும்போது, இடம்பெறுகின்ற அதுபோன்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக கடுமையான சட்டத்திட்டங்கள் அவசியமாக உள்ளது.

இதற்கான நடவடிக்கைகளின்போது, சர்வதேச ரீதியில் நடைமுறை நிலமைகள் மற்றும் அனுபவங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து கிடைக்கும் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானதாகும் என நீதி அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்போது, அவசியமான சட்ட மறுசீரமைப்புகளுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலக அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க இணக்கம் தெரிவித்ததாக நீதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435