சம்பள விடயத்தில் புதிய அணுகுமுறை – அடுத்த திங்கள் முதல்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் புதிய நடைமுறை ஒன்றை பின்பற்றுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிமார் சம்மேளனம் என்பவற்றுடன் நிதயமைச்சும் இணைந்து கலந்துரையாடி, அமைச்சரவை பத்திரம் ஒன்றை முன்வைக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நிதியமைச்சுடன் தாம் உள்ளிட்ட தொழிற்சங்கள் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்காரணமாக தீபாவளி தினத்தை அடுத்து இடம்பெறவிருந்த தொழிலாளர்களுடைய சம்பள பிரச்சினை தொடர்பான போராட்டங்களையும் ஒத்தி வைத்துள்ளதாக ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435