சம்மாந்துறையில் இரு இந்தியர்கள் கைது

சுற்றுலா வீசாவில் இலங்கை வந்து கூலி வேலை செய்த இரு இந்திய பிரஜைகள் இருவரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் இருவரும் குடிவரவு குடியகழ்வு சட்டத்தை மீறி சுற்றுலா வீசாவை பயன்படுத்தி இலங்கை வந்து சம்மாந்துறை பிரதேசத்தில் உள்ள வலனாபிட்டிய பகுதியில் கூலி வேலை செய்து வந்த நிலையில் கடந்த 10ஆம் திகதி இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த 24, 25 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றுமுன்தினம் சம்மாந்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட குறித்த இரு இந்தியர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435