சர்வதேச தொழிலாளர் தின மாற்றம்; ஐ.நாவிடம் முறைப்பாடு

சர்வதேச தொழிலாளர் தின கொண்டாட்ட தினம் மாற்றப்பட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்து ஐ.நா தொழிலாளர் காரியாலயத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம் முறைப்பாடு செய்துள்ளது.

விசாக பூரணை வாரத்தை முன்னிட்டு, பௌத்த மகாசங்கத்தினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய, சர்வதேச தொழிலாளர் தினத்தை மே மாதம் 7 ஆம் திகதி கொண்டாட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பௌத்த மத குருக்களின் வேண்டுகோளுக்கமைய அமைச்சரவையால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கமைய, மே மாதம் 01ம் திகதி உள்ள விடுமுறையை இரத்து செய்து, மே மாதம் 07ம் திகதி விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துவதற்கும் அமைச்சரவை தீர்மானித்தது.

இந்த விடயமானது தொழிலாளர்;களின் உரிமைகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ள தெரிவித்து ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் அது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435