சிறைச்சாலைகள் திணைக்கள வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு

சிறைச்சாலைகள் திணைக்களத்தில் வெற்றிடமாகவுள்ள சிறைக்காவலர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

1068 ஆண் சிறைக்காவலர்கள் மற்றும் 116 பெண் சிறைக்காவலர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாக அரச சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விளம்பரங்கள் இன்று வெளியான அரச வர்த்தமானியில் பெற்றுக் கொள்ளமுடியும்.

இந்த வெற்றிடங்களுக்கு 95 வீதம் திறந்த முறையிலும், சிறைச்சாலை திணைக்களத்தில் சேவையாற்றுவோரிலிருந்து 5 வீதமும் பணியாளர்களாக சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.

க.பொ.த சாதாரண தரத்தில் 06 பாடங்கள் சித்தியடைந்த 18 – 35 வயதுக்குட்பட்டோர் இதற்காக விண்ணப்பிக்க முடியும் விண்ணப்பங்கள் 18.12.2017 வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435