சீரற்ற காலநிலையால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

முல்லைத்தீவில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நாயாற்று பகுதியில் மீனவர்களின் கடற்றொழில் நடவடிக்கைககள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடரும் சீரற்ற காலநிலையினால் நாயாற்று பகுதியில் மீனவர்கள் கடற்றொழிலுக்கு செல்லவில்லை என நாயாற்று கிராமிய கடற்றொழில் அமைப்பின் செயலாளர் கதிரேஸ் கமலேஸ்குமார் தெரிவித்துள்ளார்.

இதனால் மீனவர் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பகுதியில் உள்ள மீனவர் வாடிகள் கடந்த 8ஆம் திகதி ஏற்பட்ட தீ அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்தன.

இதன் காரணமாகவும் குறித்த மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

வழிமூலம்: தமிழ்வின்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435