தனியார் நிறுவனங்களுக்காக சுகாதார பாதுகாப்பு அதிகாரி அவசியம்

அரசாங்கத்தினால் விடுமுறை வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் திறக்கப்பட்டுள்ள தனியார் நிறுவனங்களுக்காக சுகாதார பாதுகாப்பு அதிகாரி ஒருவரை நியமிக்க வே;ணடும் என தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான ஆலோசனைகள் அடங்கிய கோவை தனியார் நிறுவனங்களுக்கு தற்போது அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் சரத் அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

தனியார் நிறுவனங்களை தொற்று நீக்கத்துக்கு உள்ளாக்குதல் மற்றும் பணியாளர்கள் முகக் கவசங்களை அணிதல் என்பன அந்த ஆலோசனைகளில் முக்கியமானவையாகும்.

இந்த நிலையில், குறித்த ஆலோசனையை நடைமுறைப்படுத்தாத தனியார் நிறுவனங்களுக்கு எதிராக மாவட்ட தொழில் ஆணையாளர் ஊடாக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435