தனியார் மயப்படுத்தினால் தொடர்ச்சியான வேலை நிறுத்தம்

ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தை தனியார் மயப்படுத்தப்படுகின்றமையை தடுக்கும் நோக்கில் அந்நிறுவனத்தின் அனைத்து தரப்பினரும் இணைந்து ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பொன்றை உருவாக்கியுள்ளனர்.

இக்கூட்டமைப்பில் அங்குள்ள அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் பிரிவுகளும் உள்ளங்குகின்றன என்றும் ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தை தனியார் மயப்படுத்த அரசாங்கம் முயற்சிக்குமாயின் அனைத்து தரப்பினரும் இணைந்து கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளும் என்றும் தொடர்ச்சியாக வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படும் என்றும் அத்தொழிற்சங்க கூட்டமைப்பின் பிரதான பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இலங்கை விமானச்சேவையை லாபமீட்டும் வகையில் முன்னெடுப்பதற்கு முன்னைய நிர்வாகம் போன்றே தற்போதைய நிர்வாகமும் எந்தவொரு திட்டத்தையும் பொருளாதார நோக்கையும் கொண்டிருக்கவில்லை எனவும் அதற்காக பொருத்தமான நபரை நியமிப்பதன் அவசியம் என்பது தொழிற்சங்கங்களின் எண்ணப்பாடு ஆகும் என்றும் அப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

வேலைத்தளம்- நன்றி திவயின

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435